குளத்தில் விழுந்த காட்டுப்பன்றி சுட்டுக் கொலை

by Editor / 18-08-2022 03:21:34pm
குளத்தில் விழுந்த காட்டுப்பன்றி சுட்டுக் கொலை


கேரள மாநிலம் இடுக்கி அருகே நேற்று முன்தினம் இரவு கட்டப்பனை இடுக்கிக்காவல் மேச்சேரில் கிரீஷ் என்பவரது வீட்டு முற்றத்தில் உள்ள குளத்தில் 40 கிலோ எடையுள்ள பன்றி ஒன்று விழுந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நாங்குதொட்டியை சேர்ந்த சஜி என்பவரின் உதவியுடன் பன்றியை சுட்டு கொன்றனர்.பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் காட்டுப்பன்றியை குளத்தில் இருந்து வெளியே எடுத்து டீசல் ஊற்றி எரித்து எஞ்சிய பாகங்களை புதைத்தனர்.
 

 

Tags :

Share via