ரயில் மூலம் கடத்தப்பட்ட ஒரு கிலோ தங்கம் ரூபாய் 37.43 லட்சம் பணம் பறிமுதல்
ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 37 லட்சம் ரூபாய் ரோக்கத்தை அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரயில் அதிகாலை ஒரு மணிக்கு வந்து நின்றது .அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என போலீசார் சோதனை மேற்கொண்டபோது கோவையைச் சேர்ந்த நாகராஜ் என்ற பயணி உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ஒரு கிலோ 350 கிராம் தங்கமும் 37 லட்சமும் 43 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து நுங்கம்பாக்கம் வருமான வரித் துறைக்கு தகவல் அழித்த ரயில்வே போலீசார் தங்கம் மற்றும் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது கடத்தல் தங்கமா ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :