59 வயது பாட்டிக்கு இரண்டாவது திருமணம்

by Editor / 21-08-2022 05:42:48pm
59 வயது பாட்டிக்கு இரண்டாவது திருமணம்

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ரதிமேனன். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது இரண்டு மகள்களும் திருமணமாகி அவர்களது கணவர் வீட்டில் விசித்து வருகின்றனர். இதனால் 59 வயதாகும் ரதிமேனன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் மகள்களால் அடிக்கடி வந்து அவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. மேலும் தங்கள் தாயின் தனிமையை மகள் இருவரும் உணர்ந்துள்ளனர். இதையடுத்து தாய்க்கு 2வது திருமணம் செய்து வைக்க மகள்கள் முடிவு செய்து மணமகனை தேடிவந்தனர். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த மனைவியை இழந்த திவாகரன் என்பவருக்கும் தாய் ரதிமேனனுக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருச்சூர் திருவம்பாடி கோயிலில் வைத்து திருமணம் செய்த வைத்தனர். 59 வயதாகும் தனது தாய்க்கு மகள்கள் 2வது திருமணம் செய்து வைத்தது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

 

Tags :

Share via