சென்னை துபாய் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Editor / 27-08-2022 10:51:46am
சென்னை துபாய் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு காலை 7.20 மணிக்கு செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.அந்த விமானத்தில் 167 பயணிகள் இருந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தொலைபேசி மூலம் விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி வெடிகுண்டு  மிரட்டலைத் தொடர்ந்து விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், விமான நிலையத்திற்கு வந்த தொலைபேசி எண்ணை கண்டறிய விசாரணைகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via