இளைஞரின் வீட்டின் முன்பாக தாலிக்கயிறுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கோவில் பூசாரி திருநங்கையால் பரபரப்பு.

by Editor / 02-09-2022 10:06:02am
 இளைஞரின் வீட்டின் முன்பாக தாலிக்கயிறுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கோவில் பூசாரி திருநங்கையால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேவச்சேரி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநதி(33). இவர் அப்பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற தீர்த்தவாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்துவந்துள்ளார். மேலும் அவ்வப்போது அப்பகுதி பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார். 

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவிலுக்கு வந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (33) என்பவருக்கும் கோவில் பூசாரியான திருநங்கை ஸ்ரீநதிக்கும்  நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருநங்கை ஸ்ரீநிதியுடன் சேர்ந்து தங்கதுரைகும் கோவிலில் பூசாரியாக இருந்துவந்துள்ளார்.இதனையடுத்து கோவில் அருகே வீட்டில் திருமணம் ஆகாத நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் உறவு தங்கதுரை குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் தங்கதுரை மற்றும் திருநங்கை ஸ்ரீநதியுன் நட்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இளைஞர் தங்கதுரைகிற்குவேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். 

அப்போது இளைஞர் தங்கதுரை பெற்றோரின் அழுத்தத்திற்காக திருமணம் செய்துகொள்வதாகவும் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் முடித்த ஒரு மாதத்தில் உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும், இதற்கு திருநங்கை ஸ்ரீநதி சம்மதம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து இளைஞர் தங்கதுரைகிற்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து திருநங்கை ஸ்ரீநதி தங்கதுரை தொடர்பு கொண்டபோது செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். தொடர்ந்து பல முறை பேச முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் ஒரு மாதம் கடந்த பின்னரும் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய இன்றைய தினம் கையில் தாலியுடன் வந்து இளைஞர் தங்கதுரை வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இளைஞர் தங்கதுரை தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தங்கதுரை வந்தால் மட்டுமே செல்வேன் என கூறி திருநங்கை ஸ்ரீநதி போராட்டம் நடத்திய நிலையில் பாலமேடு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து பாலமேடு காவல்நிலையத்தில் திருநங்கை ஸ்ரீநதி அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் விவேக் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பாலமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கதுரையை தேடிவருகின்றனர்.கோவிலில் பூசாரியாக இருந்துவந்த திருநங்கை ஸ்ரீநதியை ஏமாற்றிய இளைஞர் தங்கதுரை தேடி திருநங்கை நடத்திய தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via