போலி ட்விட்டர் கணக்கு: போலீசில் நடிகர் சார்லி புகார்!
தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.
டிகர் சார்லி 30 ஆண்டுகளுக்கும் மேலாக 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சார்லி பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் பலரும் அதனை சார்லியின் அதிகாரப்பூர்வ கணக்கு என்று நினைத்து பின் தொடர ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சார்லி, தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சார்லி, “என்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. எந்த சமூக வலைதளத்திலும் எனக்கு கணக்கு இல்லை. ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தும் அவசியம் இதுவரை எனக்கு வரவில்லை” என்றார். மேலும், “எனது பெயரில் போலியான கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் உணர்ந்து அந்த கணக்கை பின் தொடர்வதை தவிர்க்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்
Tags :