புரட்டாசி மாத துவக்கத்தை முன்னிட்டு திருப்பதியில் குவிந்த பக்தர்கள்

by Editor / 19-09-2022 12:52:22pm
புரட்டாசி மாத துவக்கத்தை  முன்னிட்டு திருப்பதியில் குவிந்த பக்தர்கள்

ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். தமிழக பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு முறை ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என கருதுகிறார்கள். இதனால் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ திருப்பதிக்கு வருகிறார்கள். வரும் 27ம் தேதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. அதையொட்டி நீண்ட தூரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையை நோக்கி பாதயாத்திரையாக வருகிறார்கள். திருமலையில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 3 கி.மீ தூரத்துக்கு சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர்.

 

Tags :

Share via