அழகர்கோவில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் காவல்துறை விசாரணை.

by Editor / 21-07-2023 11:54:40am
அழகர்கோவில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் காவல்துறை விசாரணை.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலக புகழ்பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் அமைந்துள்ளது , இங்குள்ள பழமுதிற்சோலை என்றழைக்கப்படும் அழகர்மலையில் உடல் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பன்திருப்பதி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர்  அங்குசென்று ஆண் சடலத்தை மீட்டனர், பிறகு நடைபெற்ற விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் , நாயக்கர்பட்டியை சேர்ந்த அடைக்கலம் என்பதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனவர் என்பதும் தெரிய வந்துள்ளது மேலும் இவரின் மர்ம மரணம் குறித்து கொலையா..? தற்கொலையா..? என்பது குறித்து  அப்பன்திருப்பதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via