ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மீதான தடை நீட்டிப்பு

by Staff / 22-09-2022 12:00:32pm
ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மீதான தடை நீட்டிப்பு

ஸ்பைஸ்ஜெட் விமானங்களுக்கு ஏற்கனவே உள்ள தடையை நீட்டிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் 29 வரை ஐம்பது சதவீத சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அடிக்கடி விபத்துகள் நடப்பதால் கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பின்னாளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராவிட்டாலும் இன்னும் ஒரு மாதத்திற்கு கட்டுப்பாடு தொடர வேண்டும் என்பதே அமைச்சகத்தின் நிலைப்பாடாக உள்ளது.ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 80 விமானிகளை மூன்று மாதங்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பில் செல்ல உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via