427 ஏழுமலையான் முகங்களோடு திருப்பதிபிரம்மோற்சவத்திற்கு செல்லும் காஞ்சி பட்டு
சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் வழக்கமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த குமரவேலு - கலையரசி தம்பதியினரிடம் தங்களது குடும்பத்திற்கு தேவையான பட்டு சேலைகளை நெய்வதற்கு கொடுப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவத்திற்காக 427 பெருமாளின் திருமுகங்களுடன் கூடிய பட்டு சேலையை வழங்க முடிவு செய்து அதனை தயாரிக்கும் பொறுப்பை குமரவேலு - கலையரசி தம்பதியினரிடம் ஒப்படைக்கவே அதனை ஏற்றுக்கொண்ட அந்த தம்பதியினர் 192 மணி நேரத்தில் இந்த சேலையை நெசவு செய்துள்ளனர்.விரைவில் அந்த சேலையை ஏழுமலையான் ஆலயத்துக்கு அந்த பக்தர் வழங்க உள்ளார்.
Tags :