இந்திய ராணுவத்தில் புதிய படைப்பிரிவு தொடக்கம்

by Staff / 16-03-2024 11:51:12am
இந்திய ராணுவத்தில் புதிய படைப்பிரிவு தொடக்கம்

இந்திய ராணுவத்தின் முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு நேற்று ஜோத்பூர் ராணுவ முகாமில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் பீரங்கி அழிப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அப்பாச்சி ஹெலிகாப்டர்களால் ஒரு நிமிடத்தில் 128 இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். இரவிலும் எதிரிகளை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவை சீன, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

 

Tags :

Share via