வி.சி.க. பேரணிக்கு அனுமதி மறுப்பு

by Staff / 29-09-2022 11:56:01am
வி.சி.க. பேரணிக்கு அனுமதி மறுப்பு

காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி, மனித சங்கிலி பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி காவல்துறையிடம் அனுமதி கோரியது. பேரணிகள், நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் அனுமதி கோரியது.

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு காரணமாக விசிக, உள்ளிட்ட பல அமைப்புகள் நடத்தவிருந்த பேரணிக்கு அனுமதி தர இயலாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகர ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2ம் தேதி விசிக, இடதுசாரிகள் நடத்த இருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்த பேரணியில் மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via