பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையைத்தொடங்கி வைக்கிறார்.

by Admin / 30-09-2022 10:54:45am
பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையைத்தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகளைத்தொடங்கி வைத்து வருகிறார்.இன்று அவர் காந்தி நகரிலிருந்து மும்பைக்குச்செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையைத்தொடங்கி வைக்கிறார்.இந்த ரயில் குஜராத் தலைநகரையும் மகாராஷ்ரா தலைநகர் மும்பையையும் இணைக்கும்.160 கி.மி.வேகத்தில் செல்லும் ரயிலானது பயணிகளின் அனைத்து வசதிகளையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவின் மூன்றாவது சேவையாகும். முதல் இரண்டு தடங்கள் புதுடெல்லி-வாரணாசி,புதுடெல்லி-ஸ்ரீமாதாவைஷ்ணவதேவி கத்ரா வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் 75 விழுக்காடு இந்திய தொழில்நுட்பத்துடனும் மேக் இன் இந்தியா திட்டத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via