தொலைந்து போன சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

by Staff / 03-10-2022 05:06:24pm
தொலைந்து போன சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

திருக்கோவிலூர் அருகே தொலைந்து போன சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையை சேர்ந்த லட்சுமணன்- மற்றும் பார்வதி தம்பதி மகன் ஹரி பிரசாந்த் (வயது 5). கடந்த 2 நாட்களுக்கு முன்பு லட்சுமணன் தனது மகன் ஹரி பிரசாத்தை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் விஜயகுமார் வீட்டில் விட்டுச் சென்றார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் சிறுவனைப் பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சிறுவன் தனியாக செல்வதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஹரி பிரசாந்த்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை விசாரித்த போது சிறுவன் மணலூர்பேட்டை என்பதும் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு வந்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சிறுவனை அவரது பெற்றோர்களிடம் ஒப்ப டைக்க மணலூர்பேட்டை அழைத்துச் சென்றனர். அப்போது தகவல் அறிந்த பெற்றோர்கள் மாணவனை அழைத்துச் செல்ல தியாகதுருகம் வந்திருந்தனர். இதனை தொடர்ந்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் போலீசார் ஹரிபிரசாந்தை பெற்றோ ரிடம் ஒப்படைத்தனர். சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via