இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு கர்நாடகாவில் பெரும் வரவேற்பு

by Staff / 07-10-2022 12:00:12pm
இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு கர்நாடகாவில் பெரும் வரவேற்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு கர்நாடகாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் பாஜக அரசின் ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவிலும் பா.ஜ.க.வினர் பேரணி நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.வியாழன் அன்று காங்கிரஸ் பேரணியில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். மாண்டியா மாவட்டம் ந்தவபுராவுக்கு வந்திருந்த சோனியாவை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

 

Tags :

Share via