இந்தி மொழியை திணிக்கவில்லை" - அண்ணாமலை

by Staff / 13-10-2022 12:24:45pm
 இந்தி மொழியை திணிக்கவில்லை

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை. திமுக அரசின் கபட நாடகம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை என தெரிவித்தார்.

 

Tags :

Share via