பாட்டியை கொன்று சுவற்றில் மறைத்த பேரன்

by Staff / 13-10-2022 05:24:49pm
பாட்டியை கொன்று சுவற்றில் மறைத்த பேரன்

கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் வசித்து வந்தவர் 70 வயது மூதாட்டி சாந்தகுமாரி. இவர் அங்கு தனது மகள் சசிலேகா மற்றும் பேரன் சஞ்சயுடன் தனியே வசித்துவந்துள்ளார். மூதாட்டி சாந்தகுமாரிக்கு சாஸ்திரம் சம்பிரதாயம் மீது அதீத நம்பிக்கை உள்ளதால், தனது மகள் மற்றும் பேரனும் அதே போல் இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். இந்த தகராறு சாப்பாடு விஷயத்திலும் நடந்துள்ளது.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு (10 ஆண்டுகளுக்கு முன்பு) ஆகஸ்ட் மாதம் பேரன் சஞ்சய் கோபி மஞ்சூரியன் வாங்கிவந்து சாப்பிட்டுள்ளார். அப்போது மூதாட்டி பேரனை வசைபாடியுள்ளார். இதனால் கோபமடைந்த பேரன் மூதாட்டியை சரமாரியாக அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள பாட்டியை கண்டதும் பதறிப்போன பேரன், உடனே தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து வெளியே சொன்னால் நமக்கு பிரச்னை வந்துவிடும் என்ற பயத்தில் மூதாட்டியின் உடலை கரி மற்றும் சிமென்ட்டால் வீட்டிலுள்ள ஓர் அலமாரியில் புதைத்ததுள்ளனர். இந்த சம்பவம் நடக்கும்போது உடன் சஞ்சயின் நண்பரான நந்தேஷ் என்பவரும் உதவிபுரிந்துள்ளார். இந்நிலையில் கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் பாட்டியை கொன்று விட்டு பேரனும், தாயும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு மஹாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via