பெண்ணை பலாத்காரம் செய்து நிர்வாண படம் பிடித்து மிரட்டல்

by Staff / 14-09-2023 11:32:17am
பெண்ணை பலாத்காரம் செய்து நிர்வாண படம் பிடித்து மிரட்டல்

கேரளாவின் கோட்டயம் அருகே இல்லத்தரசியை மிரட்டி பலாத்காரம் செய்து, நிர்வாண காட்சியை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி பணம் பறித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். ஏடுமானூர் போலீசார் எஸ்.அதுல் (23) என்பவரை கைது செய்தனர். சமூக வலைதளங்கள் மூலம் பழகி, நெருக்கமாக இருந்துள்ளார். தொடர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மிரட்டி, பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பணம் தரவில்லை என்றால் புகைப்படங்களை பரப்பி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். பின்னர் அப்பெண்ணின் படத்தை பயன்படுத்தி போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி, கைவசம் உள்ள அவரின் நிர்வாணப் படங்களை பலருக்கு அனுப்பியுள்ளார்.

 

Tags :

Share via