அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது

by Staff / 14-09-2023 11:36:58am
அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக ஆன்மீக சொற்பொழிவாளரும், முன்னாள் விஷ்வ பரிஷத் இயக்க தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர், அம்பேத்கர் உள்ளிட்டோர் குறித்து மணியன் பேசிய வீடியோவுக்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டில், நள்ளிரவில் கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via