சிறுமி பாலியல் வன்கொடுமை கடைக்காரருக்கு 20 ஆண்டு சிறை

by Staff / 16-10-2022 05:08:45pm
 சிறுமி பாலியல் வன்கொடுமை கடைக்காரருக்கு 20 ஆண்டு சிறை

ஈரோடு மஜீத் வீதியில் கடைகளில் எடைபோடும் தராசு விற்பனை மற்றும் ஜெராக்ஸ் நிலையம் நடத்தி வருபவர் சரவணன். இவர் 16 வயது சிறுமிக்கு 2017 ம் ஆண்டு முதல் 2021- ஆண்டு வரை நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்த ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்க பட்டது. மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி சரவணனுக்கு 20- ஆண்டுகள் சிறை தண்டனையும் 5- ஆயிரம் ரூபாயும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via