ஜூலை 31ல்  சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வு முடிவுகள் 

by Editor / 17-06-2021 06:58:04pm
ஜூலை 31ல்  சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வு முடிவுகள் 

 


கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் கணக்கீடு நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கொள்கையை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ ஆகியவை இன்று உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என +2 தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் கணக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள், 12-ம் வகுப்பில் இடைத்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் 40% வெயிட்டேஜ் மார்க் வழங்கப்படும் எனத் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். மேலும் எழுத்துத்தேர்வு மதிப்பீட்டில் மாணவர்கள் குறைந்த பட்சம் 32 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்று கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த வகியில் சிபிஎஸ்இ-யில் படித்த =2 மாணவர்களுக்கான தேர்வுகள் ரிசல்ட் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

Tags :

Share via