பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

by Staff / 22-10-2022 01:12:33pm
பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தீபாவளி திங்கள் கிழமை கொண்டாடப்படுவதால் சொந்த ஊர் சென்றவர்கள் அடுத்த நாள் பள்ளி, அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தீபாவளி அன்றே பலர் சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர்.இந்த கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via