வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

by Staff / 23-10-2022 04:46:06pm
வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

தக்கலை அருகே உள்ள வெள்ளிகோடு காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் குமார் ராஜ் (வயது37), தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் அவதிப்பட்டார். இதனால் தீபாவளிக்கு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு துணிகள் எடுக்க முடியவில்லை என நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் தனி யறையில் மின்விசிறியில் குமார் ராஜ் தூக்கில் தொங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி ரேகா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via