நடுரோட்டில் காவலரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு.

by Editor / 29-10-2022 08:43:37am
நடுரோட்டில் காவலரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு.

உத்தர பிரதேச மாநிலம் பாரா காவல் நிலையத்திற்குட்பட்ட புத்தேஷ்வர் கிராசிங் அருகே தலைமைக் காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 4 இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் அஜாக்கிரதையாக பைக் ஓட்டி வந்துள்ளனர். இதை பார்த்த போலீஸ் அவர்களை தடுத்து விசாரணை மேற்கொண்டிருக்கும் போதே அந்த இளைஞர்கள் அவரை நடுரோட்டில் வைத்து சராமாரியாக் தாக்கியுள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அந்த 4 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : A head constable was patrolling near Budheshwar crossing under Para police station in Uttar Pradesh.

Share via