விஷ வாயு தாக்கி மூவர் பலி: விடுதி உரிமையாளர் கைது

by Staff / 29-10-2022 03:10:25pm
விஷ வாயு தாக்கி மூவர் பலி: விடுதி உரிமையாளர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியம் கிராண்ட் என்ற பெயரில் தனியார் சொகுசு விடுதி செயல்படுகிறது.இங்கு 21ம் தேதி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ரங்கநாதன், 51, நவீன்குமார், 20, திருமலை, 21 ஆகிய மூவர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி ஈடுப்படுத்தப்பட்டனர்.

அப்போது, விஷ வாயு தாக்கி மூவரும் இறந்தனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே, விடுதி மேலாளர் முரளி, 40, விடுதி ஒப்பந்ததாரர் ரஜினி, 45 ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த விடுதி உரிமையாளர் சத்தியமூர்த்தி, 52 என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்

 

Tags :

Share via