விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்

by Staff / 29-10-2022 03:06:04pm
விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது இன்று காலை குஜராத் அதுல் ரெயில் நிலையம் அருகே மாடு மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ரெயில் என்ஜினின் முன்பகுதியில் சிறிதளவு சேதமடைந்தது. இதனையடுத்து ரெயில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் மூலம் இந்த மாதத்தில் (அக்டோபர்) 3-வது முறையாக வந்தே பாரத் ரெயில் விபத்தில் சிக்கி உள்ளது.

 

Tags :

Share via