கேரளாவில் 20,000 வாத்து, கோழிகள் அழிப்பு

by Editor / 30-10-2022 12:33:05am
கேரளாவில் 20,000 வாத்து, கோழிகள் அழிப்பு

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் ஆலப்புழா பகுதி பண்ணைகளில் இருக்கும் சுமார் 20,000 கோழி, வாத்துக்கள் அழிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருக்கிறதா? என்று சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via