விளாத்திகுளத்தில், அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

by Staff / 03-04-2023 04:46:28pm
விளாத்திகுளத்தில், அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் பேசிய போது,திராவிட முன்னேற்ற கழகம் மத உணர்வை மதிக்கிறது. மதவெறி கொள்ளக்கூடாது என்று தான் வலியுறுத்துகிறது. சனாதனம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பிறரை அடிமைப்படுத்தி வைக்கிறோம் என்பதையே மறந்துவிட்டு. மதத்திற்கு எதிரானவர்கள் திமுக என்ற மாயயை உருவாக்கி குட்டையை குழப்பி மீன்பிடிக்கலாம்னு இருக்காங்க. ஒன்னுமே நடக்கப்போறதில்லை ஏழை எளிய மக்களுக்கான திட்டம் எதுவுமே ஒன்றிய அரசு செய்யவே இல்லை. தற்போதகூட சுங்கவரி கட்டணம் உயர்த்தியிருக்கிறார்கள். எல்லாப் பொருளும் விலையேறும். நமது முதல்வர் சொன்ன வாக்குறுதிகளில் 85% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். மத, சாதி வேறுபாடு கிடையாது என்பதை திமுக உணர்த்தியிருக்கிறது‌ - என்று கூறி, கட்சியில் அதிக அளவு உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்றும் பூத் கமிட்டி மெம்பர்களை நியமிக்கும் போது புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். திமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விளாத்திகுளம் புதூர் எட்டையபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via