எடப்பாடி மீது டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தமிழ்நாடு இலஞ்சஒழிப்புத்துறை சார்பில் தொடர்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார், மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி இருந்தனர்.
Tags : எடப்பாடி மீது டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.