அண்ணாமலை கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.சாலைமறியல்

by Editor / 01-11-2022 08:02:25pm
அண்ணாமலை கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.சாலைமறியல்

பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை அவதூறாக பேசிய திமுகவினரை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பா.ஜ.க. மகளிர் அணி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய காரணத்துக்காக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்த கைதை  கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.மேலும் பல்வேறு பகுதிகளில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.அவர்களை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாமலை கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.சாலைமறியல்
 

Tags :

Share via