முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ

by Staff / 15-03-2024 12:00:33pm
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ

பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, மோசடி வழக்கில் உதவி கோரி ஒரு பெண் தனது 17 வயது மகளுடன் எடியூரப்பாவை சந்திக்க சென்றுள்ளார். அப்போது, ​​அவர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, எடியூரப்பா மீது சதாசிவநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via