ஆற்றில் சிக்கிய பெண் இரண்டு நாட்களுக்குக்கு பின் உயிருடன் மீட்பு

by Staff / 11-11-2022 03:28:36pm
ஆற்றில் சிக்கிய பெண் இரண்டு நாட்களுக்குக்கு பின் உயிருடன் மீட்பு

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே நேற்று மதியம் 1. 30 மணிக்கு ஆற்றில் குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி மாயமானதை தொடர்ந்து, தேடும் பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டுவந்தனர். இரண்டாவது நாளான இன்று மீண்டும் அதிகாலையில் இருந்தே தீயணைப்பு துறை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். திருவட்டாரிலிருந்து 10 கி. மீ தொலைவில் திக்குறிச்சி அருகே தீயணைப்பு வீரர்களால் இன்று 1. 30 மணிக்கு உயிருடன் மீட்கப்பட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via