தாயின் நண்பனால் சீரழிந்த மகள்

by Staff / 21-01-2023 11:48:58am
தாயின் நண்பனால் சீரழிந்த மகள்

திருச்சூரில் 15 வயது சிறுமியை தாயின் நண்பன் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறையும் ரூ.30,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வினயன் (39) என்பவர், 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். தாயிடம் இது பற்றி தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து, ஆசிரியையிடம் தெரிவித்தும், சைல்டு லைன் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. முன்னதாக, கணவர் வந்து விடுவாரோ என பயந்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

 

Tags :

Share via