பள்ளியில்‌ சிறுமி மர்ம சாவு

by Staff / 13-11-2022 05:01:31pm
 பள்ளியில்‌ சிறுமி மர்ம சாவு

தாரமங்கலம்‌ நகராட்சி எம்‌. ஜி. ஆர்‌ காலனியில்‌, மாற்றுத்திறனாளிகள்‌ மறுவாழ்வு மையம்‌ மற்றும்‌ மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி மற்றும்‌ மையத்தை லாரன்ஸ்‌ அந்தோணிசாமி நிர்வகித்து வருகிறார்‌. இந்த மையம்‌ மற்றும்‌ பள்ளியில்‌ 4 வயது குழந்தை முதல்‌ 30 வயதுள்ளவர்கள்‌ வரை தங்கி படித்து வருகின்றனர்‌. இங்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ என 100 பேரும்‌, முதியோர்கள்‌ 70 பேரும்‌ உள்ளனர்‌. இங்குள்ள பள்ளியில்‌ ஆத்தூர்‌ தாலுகா - நடுவலூரைச்‌ சேர்ந்த ஆசைதம்பி என்பவரது மனவளர்ச்சி குன்றிய மகள்‌ ஸ்டான்லி ரோஸ்‌(8) கடந்த ஏப்ரல்‌ மாதத்தில்‌ - இருந்து அனுமதிக்கப்பட்டு கல்வி பயின்று வந்துள்ளார்‌. இந்நிலையில்‌, சிறுமியை பள்ளி குளியலறையில்‌ சிறுமி கால்‌ தவறி கீழே விழுந்ததில், அவரது பின் தலையில் பலத்த அடிபட்டது. மயங்கி விழுந்த சிறுமியை, தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத் தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த, சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசா ரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via