குழந்தையை கொன்ற கொடூர தந்தை
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த நபர் வினோத். 42 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இவரது மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். பிரிந்த சென்ற மனைவிக்கு பாடம் புகட்ட கருதிய வினோத், தற்கொலை செய்வது போல் நாடகம் நடத்த போவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு, பின் உண்மையிலேயே தனது மூத்த மகளை கொன்றுள்ளார். அதனை தனது இளைய மகளை வைத்து புகைப்படமும் எடுத்துள்ளார். வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :