மயிலாடுதுறை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

by Staff / 16-11-2022 11:54:22am
மயிலாடுதுறை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் கடந்த 11ம் தேதி இரவு 44 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. கனமழையால் குடியிருப்புகள், விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்தது. பின்பு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பு முகாம்களில் தாங்க வைக்கப்பட்டனர். சீர்காழி பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறார்.

 

Tags :

Share via