தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் மோடி

by Staff / 18-11-2022 07:34:15am
தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம்  மோடி

டெல்லியில், தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை தடுப்பது தொடர்பான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த மாநாட்டை உலகம் தீவிரமாக கவனித்து வருவதாக தெரிவித்தார். பல ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களை தீவிரவாதம் இந்தியாவை காயப்படுத்த முயன்றதாகவும், ஆனால், தீவிரவாதத்திற்கு எதிராக நாம் தைரியமாக போராடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தீவிரவாதத்தின் ஆபத்துகளை உலகிற்கு யாரும் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை எனக்கூறிய பிரதமர் மோடி, சில வட்டாரங்களில் தீவிரவாதம் குறித்து இன்னும் தவறான கருத்துகள் நிலவுவதாக கூறினார். மேலும், தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், தீவிரவாதிகளுக்கு வரும் நிதியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தீவிரவாதத்தின் இருண்ட முகத்தை நம் நாடு கண்டுள்ளது என்ற பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை ஒருசில நாடுகள் வழங்கி வருகின்றன. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

Tags :

Share via