பிளாஸ்டிக் கவரில் இளம்பெண் உடல்

by Staff / 19-11-2022 12:21:43pm
பிளாஸ்டிக் கவரில் இளம்பெண் உடல்

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரின் யமுனா நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் எனவும், முகத்தில் காயங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பெண்ணை கொலை செய்தவர்கள் யார்? பிளாஸ்டிக் கவரில் சுற்றி, வீசி சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via