அழுகிய நிலையில் பெண் பிணம்
கோவை சுல்தான் பேட்டையை அடுத்த வதம்பச்சேரி அருகே பி. ஏ. பி கால்வாய் பாலத்தின் அடியில் 45 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அதிகாரி மேகலாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே சுல்தான் பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
காவல்துறையினர் அங்கு வந்து அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்ணைச் சோதனை செய்தனர். அவர் பச்சை நிற சேலை அணிந்திருந்தார். பின்னர் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு கோவை இ. எஸ். ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கால்வாயில் இறந்து கிடந்த அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :