பெண் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 25-11-2022 05:20:24pm
பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த வெங்கடாசலத்தின் மனைவி ரேவதி (38, ) என்பவர் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவர் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதமும் கருத்து வேறுபாடும் தகராறும் ஏற்பட்டுள்ளது

இதனால் மனமடைந்த ரேவதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரேவதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via