லச்சித் போர்புகானின் 400வது பிறந்தநாளின் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 25-11-2022 05:25:25pm
 லச்சித் போர்புகானின் 400வது பிறந்தநாளின் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர்  நரேந்திர மோடி இன்று புது தில்லியில் லச்சித் போர்புகானின் 400வது பிறந்தநாளின் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், 'லச்சித் போர்புகான் - முகலாயர்களை தடுத்து நிறுத்திய அசாம் ஹீரோ' என்ற புத்தகத்தையும் பிரதமர் வெளியிட்டார்.

பாடப்படாத மாவீரர்களை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, முகலாயர்களைத் தோற்கடித்து வெற்றிகரமாக அஸ்ஸாமின் அஹோம் இராச்சியத்தின் ராயல் ஆர்மியின் புகழ்பெற்ற ஜெனரல் லச்சித் போர்புகனின் 400வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. ஔரங்கசீப்பின் கீழ் முகலாயர்களின் எப்போதும் விரிவடைந்து கொண்டிருந்த லட்சியங்களை நிறுத்தியது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வீர் லச்சித் போன்ற துணிச்சலான மகன்களை வழங்கிய அஸ்ஸாம் நிலத்திற்கு தனது மரியாதையை வெளிப்படுத்தி தொடங்கினார். “வீரமிக்க லச்சித் போர்புகானின் 400வது பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குகிறோம். அசாமின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார்” என்று அவர் கூறினார்
 

Tags :

Share via