மாமியார்..கணவன் அடுத்தடுத்து பலி..பெண்கைது.

by Editor / 04-12-2022 09:10:11am
மாமியார்..கணவன் அடுத்தடுத்து பலி..பெண்கைது.

மும்பையை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் கமல் காந்த். சில நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்த இவர், மீண்டும் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார். ஆனால் அவரின் பழைய காதலின் நினைவுகள் இவரை துரத்தியதால், கணவருக்கும் மாமியாருக்கும் சாப்பாட்டில் slow poison ஐ கலந்து கொடுத்துள்ளார். அதில் இவரது மாமியார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தற்போது இவரது கணவரும் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே கவிதாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவரே தனது மாமியருக்கும் கணவருக்கும் விஷம் வைத்து கொன்றது தெரிய வந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தற்போது கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via