தொடக்கப் பள்ளிகள் மூடப்படாது அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

by Staff / 08-12-2022 02:34:16pm
தொடக்கப் பள்ளிகள் மூடப்படாது அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும். தோ்வு விடுமுறை குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.  அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப் பள்ளிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது தொடக்கப் பள்ளிகளில் 10 லட்சம் போ் சோ்ந்துள்ளனா். ஆகவே, தொடக்கப் பள்ளிகள் மூடப்படாது என்றார்.

 

Tags :

Share via