இஸ்ரேலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த 8 ஆராய்ச்சி மாணவர்கள்

by Staff / 15-10-2023 02:32:03pm
இஸ்ரேலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த 8 ஆராய்ச்சி மாணவர்கள்

இஸ்ரேலில் இருந்து தனி மானம் மூலம் டெல்லி வந்து டெல்லியில் இருந்து மதுரை வந்த எட்டு பேரை மதுரை மாவட்ட ஆட்சியர் வரவேற்றார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த மற்றும் திருச்சியை சேர்ந்த இருவர் அரியலூர் சேர்ந்த ஒருவர் மற்றும் சிவகிரி சேர்ந்த ஒருவர் உட்பட எட்டு பேரை மாவட்ட வருவாய் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர் இஸ்ரேலில் நடைபெற்ற வரும் போர் காரணமாக ஆபரேஷன் அஜய் மூலமாக இந்தியா திரும்பியவர்களில் 22 தமிழர்கள் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அதில் பர்லான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் 8 பேர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் யாதவ் வரவேற்பு அளித்தனர்

 

Tags :

Share via