டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு

by Editor / 25-09-2021 03:32:45pm
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு



சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தபடி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்து/
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் டாஸ்மாக்கில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம், 25,009 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக 2021 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
 இதற்காக ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலவாகும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750-ல் இருந்து ரூ.13,250 ஆகவும், கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.12,750-ல் இருந்து ரூ.13,250 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.10,600-ல் இருந்து ரூ.11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.9,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

 

Tags :

Share via