வாய்க்காலில் கிடந்த இளம் பெண் சடலம்

by Staff / 08-12-2022 02:16:19pm
வாய்க்காலில் கிடந்த இளம் பெண் சடலம்

தஞ்சை அருகே வாய்க்காலில் கிடந்த இளம் பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.தஞ்சை அருகே வடசேரி வாய்க்காலில் அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் கிடப்பதாக தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட பெண் சடலத்திற்கு சுமார் 25 வயது இருக்கலாம். அந்த பெண் யார் என அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து சடலத்தை மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த இளம் பெண்ணின் கழுத்தில் துப்பட்டாவில் முடிச்சு போடப்பட்டு இருந்ததால் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. மேலும் நெற்றியிலும் ஒரு காயம் காணப்பட்டது. இந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via