மீண்டும் செயல்படத் தொடங்கிய ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு

by Admin / 14-08-2021 01:19:50pm
மீண்டும் செயல்படத் தொடங்கிய ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

 டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் குடும்பத்தினரின்  புகைப்படங்களை ராகுல் காந்தி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டதை காரணம் காட்டி அவரது டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் தற்காலிகமாக தடை செய்தது.

ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 5 பேரின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, இந்தியாவின் அரசியல் செயல்பாடுகளில் தலையிடுவதன் மூலம் டுவிட்டர் ஆபத்தான விளையாட்டை விளையாடுவதாகவும் எச்சரித்திருந்தார்.

 இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் அன்லாக் செய்துள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via