மாண்டஸ் புயல் எதிரொலி...

by Editor / 09-12-2022 06:14:31pm
மாண்டஸ் புயல் எதிரொலி...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சாலையில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று சாலையில் சாய்ந்தது மேலும் அப்பகுதியில் மூன்று மின்சார கம்பங்கள் பல உடைந்தன மின்சாரம் துண்டிப்பு போக்குவரத்து மாற்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக் கருதி குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவிப்பு.

வேளாங்கண்ணியில் கடல் கடும் சீற்றமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்கவோ கடலின் அருகில் செல்லவோ கடற்கரை கண்காணிப்பு கோபுரம் அருகே செல்வது கூடாது வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை.

 

 

 

 

 

Tags :

Share via