கோர விபத்தில் ஐந்து மாணவர்கள் பலி
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பயங்கர சோகம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, மாணவர்கள் குழு ஒன்று நாசிக்கில் இருந்து சின்னார் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் எதிர்பாராதவிதமாக மற்ற இரண்டு வாகனங்கள் மீது மோதினர்.மொஹ்தாரிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாகவும், ஐந்து மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். எதிரே வந்த கார் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :