சமையலறையில் தீ பிடித்ததில் பெண் பலி
மதுரை அவனியாபுரம் சக்திஸ்வரி நகர் 2வது தெருவை சேர்ந்த கலைச்செல்வி (58) என்பவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. இதில் தீக்காயம் அடைந்த கலைச்செல்வியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கலைச்
செல்வியின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :